News

பாடசாலை மாணவர்களுக்கு கல்வி அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

பாடசாலை மாணவர்களுக்கு அடுத்த வருடம் மாதம் பெப்ரவரி 19ஆம் திகதிக்கு முன்னர் பாடப்புத்தகங்கள் வழங்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, முகத்துவாரம் சென்.ஜோன்ஸ் கல்லூரியின் இடம்பெற்ற மாணவர்களுக்கான பாதணிகள் வழங்கும் நிகழ்வில் நேற்றையதினம் கல்வி அமைச்சர் கலந்துக்கொண்டார்.

இந்நிலையில், நாட்டில் உள்ள பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ள பாடசாலைகளில் உள்ள 7,47,093 மாணவர்களுக்கு பாதணி வழங்குவதற்கான வவுச்சர்கள் வழங்குவதற்கு இரண்டாயிரத்து இருநூறு மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேநேரம், எதிர்வரும் புதிய பாடசாலை தவணையில் தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு சீருடை மற்றும் பாடப்புத்தகங்கள் வழங்கப்படும் என கல்வி அமைச்சர் ஏற்கனவே தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button