News

கட்புலனற்றோருக்கு விசேட வாக்குச் சீட்டுகள் : கொண்டுவரப்படவுள்ள புதிய திட்டம்

தேர்தல் காலங்களில் கட்புலனற்றோருக்கான விசேட வேலைத்திட்டமொன்றினை ஆரம்பிக்கவுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

அவ்வகையில், எதிர்வரும் அனைத்து தேர்தல்களிலும் கட்புலனற்றோருக்கான விசேட வாக்குச் சீட்டுகளை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்தகைய நபர்களுக்காக அனைத்து வாக்களிப்பு நிலையங்களுக்கும் வாக்குச் சீட்டுகள் விநியோகிக்கப்படும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

நுவரெலியா மாவட்டத்திலுள்ள 10 வாக்களிப்பு நிலையங்களில் முன்னோடி திட்டமாக இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வெற்றியடைந்ததாக அவர் கூறியுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button