News

இலங்கை கிரிக்கெட் தொடர்பில் மகிழ்ச்சியான அறிவிப்பு!

இலங்கை கிரிக்கெட் மீதான தடையை நீக்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் இந்த வாரத்திற்குள் எடுக்கப்படும் என விளையாட்டுத் துறை அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றில் விசேட உரையாற்றிய போது அமைச்சர் இதனை தெரிவித்தார்.

இதேவேளை, புதிய கிரிக்கெட் தேர்வு குழுவொன்று நியமிக்கப்படவுள்ளதாக விளையாட்டுத் துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

முன்னாள் கிரிக்கெட் வீரர் உபுல் தரங்கவின் தலைமையில் புதிய கிரிக்கெட் தேர்வுக் குழு நியமிக்கப்படவுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button