News

கிரிக்கெட் மைதான ஊழியர்களுக்கு வழங்கப்படவுள்ள பரிசுத்தொகை

ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் போது மைதான ஊழியர்களுக்கு வாக்குறுதியளிக்கப்பட்ட பரிசுத் தொகை விநியோகிக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா கிரிக்கெட் நிறுவனம் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த பரிசுத்தொகைக்கு கொழும்பு ஆர்.பிரேமதாச மைதான ஊழியர்கள் மற்றும் பல்லேகல மைதான ஊழியர்கள் உரிமையுடையவர்கள் என அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதன் மூலம் கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தின் மைதான ஊழியர்கள் 138 பேருக்கும், பல்லேகல மைதானத்தின் மைதான ஊழியர்கள் 115 பேருக்கும் வரும் வெள்ளிக்கிழமை பரிசுத் தொகை வழங்கப்படவுள்ளது.

இதற்காக ஆசிய கிரிக்கட் பேரவையினால் 25,000 டொலர்களும், இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினால் 25,000 டொலர்களும் வழங்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், விநியோகிக்கப்படவுள்ள மொத்தத் தொகை 16 மில்லியன் ரூபாவை அண்மித்துள்ளதாக சிறிலங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது.

மேலும், நிரந்தர மற்றும் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் மைதான ஊழியர்களுக்கு இந்த பரிசுத்தொகை வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button