News

பண்டிகைக் காலத்தில் அதிகரித்துள்ள முட்டை விலை

இலங்கையில் பண்டிகைக் காலம் நெருங்கி வருவதால் முட்டை விலை கணிசமாக உயர்ந்துள்ளதாக வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் 42 ரூபாய் முதல் 45 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்பட்ட வெள்ளை முட்டை ஒன்றின் விலை தற்போது 50 ரூபாயை தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை சிவப்பு நிற முட்டை ஒன்று 53 ரூபாயிற்கு விற்பனை செய்யப்படுவதாகவும் வர்த்தகர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் முட்டை விலை அதிகரிப்பது வழமை என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் பொருளாளர் விஜய அல்விஸ் தெரிவித்துள்ளார்.

எனினும், எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் முட்டை விலை அதிகரிக்கப்பட மாட்டாது என முட்டை உற்பத்தியாளர் சங்கத் தலைவர் ஆர்.எம். சரத் ​​ரத்நாயக்க முன்னர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button