News

ஐபிஎல் ஏலத்தில் இருந்து நீக்கப்பட்ட பிரபல வீரர்

இந்தியன் பிரிமியர் லீக் ஏலத்தில் இருந்து இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் ஏஞ்சலோ மேத்யூஸ் நீக்கப்பட்டுள்ளார்.

ஏலத்தின் முதல் பிரிவின் கீழ் அவர் வழங்கப்பட இருந்த போதிலும், ஊடகங்களுக்கு வெளியிடப்பட்ட இறுதிப் பட்டியலில் இருந்து அவரது பெயர் நீக்கப்பட்டது.

இந்த ஆண்டுக்கான வீரர்கள் ஏலம் வரும் 19ம் தேதி துபாயில் நடைபெறவுள்ளது.

அத்தோடு, இலங்கையைச் சேர்ந்த வீரர்கள் வனிது ஹசரங்க, குசல் மெண்டிஸ், டில்ஷான் மதுசங்க, சரித் அசங்க, தசுன் சானக, துஸ்மந்த சமிர, லஹிர குமார மற்றும் நுவன் துஷார ஆகியோர் குறித்த ஏலத்தில் இடம்பெற்றுள்ளனர்.

இருப்பினும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த சீசனில் மத்திஷ பத்திரனா மற்றும் மகேஷ் தீக்ஷனவை தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button