News

மகிந்த தரப்பிற்கு பேரதிர்ச்சி : சஜித்துடன் இணையவுள்ள பெருமளவு எம்.பிக்கள்

ஆளும் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் சுமார் 25 நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்காலத்தில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைய தீர்மானித்துள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க தெரிவித்தார்.

கடந்த பொதுத் தேர்தலில் சிறி லங்கா பொதுஜன பெரமுனவில் போட்டியிட்டு இந்த குழுவினர் நாடாளுமன்றத்திற்கு தெரிவானதாகவும் அவர் கூறினார்.

இந்த குழுவுடன் கூட்டு எதிர்க்கட்சியாகவும் எதிர்காலத்தில் அரசியல் கூட்டமைப்பாகவும் இணைந்து செயற்படுவது தொடர்பில் கலந்துரையாடியுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டுள்ளார்.

புதிய கூட்டணியின் அதிபர் வேட்பாளராக சஜித் பிரேமதாசவை அதிபர் தேர்தலில் முன்னிறுத்துவது தொடர்பில் கலந்துரையாடியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button