News

பண்டிகை காலங்களில் இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

கோவிட் – 19 பெருந்தொற்று காலத்தில் பின்பற்றப்பட்ட சுகாதார பழக்கவழக்கங்களை மீண்டும் கடைப்பிடிப்பதன் மூலம், வைரஸ் நோய் தொற்றுக்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும் என ரிட்ஜ்வே மருத்துவமனையின் சுவாச நிபுணர் சன்ன டி சில்வா தெரிவித்துள்ளார்.

இரண்டு நாட்களுக்கு மேல் காய்ச்சல் நீடித்தால், மருத்துவரின் ஆலோசனையின் பேரில் இரத்தப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

மருத்துவரின் ஆலோசனையின் பேரில் பாராசிட்டமோல் தவிர மற்ற மருந்துகளை எடுத்துக்கொள்ளக் கூடாது என மேலும் அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் டெங்கு, இன்புளுவன்சா என பல வைரஸ் நோய்கள் பரவி வருகின்றது.

மேலும், இப்பொழுது பரவி வரும் வைரஸ் தொற்று கோவிட்19 வகையான வைரஸா என பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இந்த வைரஸ் தொற்றினால் தினமும் 50 சிறுவர்கள் வரை வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதாகவும் வைத்தியசாலைகளில் அனைத்துஅறைகளும் சுவாச நோயாளிகளாலும் காய்ச்சலுக்குட்பட்வர்களாலும் நிரம்பி வழிகின்றதாக தெரிவித்துள்ளார்.

இந்த பண்டிகை காலங்களில் சிறுவர்ளையும் குழந்தைகளையும் நெரிசலான இடங்களுக்கு அழைத்துச் செல்வதை தவிர்க்குமாறு பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button