News

வட கிழக்கு பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு!

தென்கிழக்கு வங்காள விரிகுடா கடல் பிராந்தியம் மற்றும் தென் அந்தமான் கடல் பிராந்தியத்தில் காற்று சுழற்சியுடன் கூடிய தாழமுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், வட அந்தமான் கடல் பிராந்தியத்திலும், நிலநடுக்கோட்டு இந்திய பெருங்கடல் பகுதியிலும் (Equatorial Indian Ocean) வெவ்வேறான காற்று சுழற்சிகள் உருவாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

குறித்த இரண்டு காற்று சுழற்சிகளும் தற்போது ஒன்றாக இணைந்து சற்று வடக்கு நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றன.

இதன் காரணமாக இன்றுள்ள வானிலை நிலவரங்களின் படி அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களிலும் நாளை (27) முல்லைத்தீவு மாவட்டத்திலும் மழை பெய்யும் சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button