News

திரிபோஷாவில் இரட்டிப்பாகும் இரசாயன அளவு: வெளியாகிய அதிர்ச்சி தகவல்

இளம் குழந்தைகளுக்கு வழங்கப்படும் திரிபோஷாவில் இரசாயனங்களை கட்டுப்படுத்தும் விதிகளில் மாற்றம் கொண்டு வரும் தீர்மானத்தினால் எதிர்காலத்தில் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என முன்னிலை சோசலிஸ கட்சி தெரிவித்துள்ளது.

இதனை முன்னிலை சோசலிஸ கட்சி ஏற்பாடு செய்த ஊடக சந்திப்பில் சுட்டிக்காட்டியுள்ளது.

திரிபோஷாவில் கொண்டு வரும் மாற்றத்தினால் எதிர்காலத்தில் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என கட்சியின் உறுப்பினர் புபுது ஜயகொட தெரிவித்துள்ளார்.

திரிபோஷாவை பயிரிடுவதற்கு பயன்படுத்தப்படும் சோளத்தில் அதிகபட்சமாக இருக்கக்கூடிய அஃப்லாடோக்சின் அளவை 5ல் இருந்து 10 ஆக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன ஒரு அமைச்சரவை சமர்ப்பித்துள்ள பத்திரத்தில் ஒரு மில்லியன் சோள தொகுதிக்கு 5 பாகங்களாக நிலவும் அதிகபட்சமான அஃப்லாடாக்சின் அளவை 10 ஆக மாற்றுமாறு கோரியுள்ளார்.

அதாவது குழந்தைகளுக்கும், கர்ப்பிணிகளுக்கும், பாலூட்டும் தாய்மார்களுக்கும் வழங்கப்படும் திரிபோஷாவின் இராசாயனத்தின் அளவை இரட்டிப்பாக்கும் செயற்பாட்டுக்கு கட்டுப்பாடு விதிக்குமாறு கோரப்பட்டுள்ளது.

அதற்காக 1980ஆம் ஆண்டின் 26ஆம் இலக்க உணவுச் சட்டத்தில் திருத்தம் செய்யுமாறு கோரப்பட்டுள்ளது.

இந்த அமைச்சரவை பத்திரத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button