News

பரீட்சைகள் திணைக்களத்தின் விசேட அறிவிப்பு!

அறநெறி பாடசாலை இறுதிப் பரீட்சைக்குத் தோற்றும் பரீட்சார்த்திகள், 2025 ஆம் ஆண்டு உயர்தர வகுப்புகளுக்கான மாணவர்களைத் தெரிவு செய்வதற்கான நேர்முகப் பரீட்சைக்கு அதே நாட்களில் அழைக்கப்பட்டால் அந்த நேர்காணலுக்காக வேறு திகதியை வழங்குமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம், அனைத்து அதிபர்களுக்கும் அறிவித்துள்ளார்.

பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிட்டுள்ளது.

பௌத்த, இந்து, கத்தோலிக்க மற்றும் அஹதிய்யா பாடசாலைகளின் இறுதிப் பரீட்சைகள் எதிர்வரும் 28 மற்றும் 29ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அன்றைய தினங்களில் சில பாடசாலைகளின் உயர்தர வகுப்புகளுக்கான நேர்முகத் தேர்வுக்கு மாணவர்கள் அழைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்ட தகவலின் பிரகாரம், அத்தகைய மாணவர்களுக்கு பாரபட்சம் ஏற்படாத வகையில் நேர்முகத் தேர்வுக்காக வேறு திகதியை வழங்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button