News

இலங்கைக்கு பாராட்டு தெரிவித்துள்ள ஐ.எம்.எப்

சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டத்தின் முதல் மதிப்பாய்வை வெற்றிகரமாக நிறைவு செய்தமைக்காக சர்வதேச நாணய நிதியம், இலங்கைக்கு தனது பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளது.

அதிபர் ரணில் விக்ரமசிங்க, மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கு இடையில் நேற்று முன்தினம் (11) அதிபர் அலுவலகத்தில் சந்திப்பொன்று இடம்பெற்றிருந்தது.

இவ்விடயம் தொடர்பில் அதிபர் ஊடக பிரிவு மேலும் அறியத்தருகையில்,

“சாதகமான ஆரம்பத்துடன் மக்கள் மீது குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்திய சவாலான மறுசீரமைப்புகளுக்கான இலங்கையின் அர்ப்பணிப்பை சர்வதேச நாணய நிதியம் வரவேற்றுள்ளது.

அத்துடன், ஆசியாவின் முன்னோடியாக மாறி, ஆட்சியை கண்டறியும் அறிக்கையை வெளியிட்டமைக்காக சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர்கள் சபைக் கூட்டத்தில், அதன் பணிப்பாளர்கள் இலங்கைக்கு தமது பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button