News

சுவிட்சர்லாந்திற்கு விஜயம் செய்துள்ள ரணில் விக்ரமசிங்க.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுவிட்சர்லாந்துக்கு விஜயம் செய்துள்ளார்.

சுவிட்சர்லாந்தின் டாவோஸில் நடைபெறவுள்ள உலக வர்த்தக மாநாட்டில் பங்கேற்பதற்காக இன்று அதிகாலை ஜனாதிபதி புறப்பட்டுச் சென்றுள்ளார்.

சுவிட்சர்லாந்து – ஆசிய வர்த்தக சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பசுமை பேச்சு ஒன்றியத்தின் கூட்டத்திலும் ஜனாதிபதி உரையாற்ற உள்ளார்.

எரிசக்தி வளத்தை உறுதி செய்யும் இலங்கையை கட்டியெழுப்புதல் என்னும் தலைப்பில் ஜனாதிபதி உரை நிகழ்த்த உள்ளார்.

இந்த விஜயத்தின் போது பல்வேறு பிரமுகர்களுடன் ஜனாதிபதி பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

சுவிட்சர்லாந்து விஜயத்தை முடித்துக் கொண்டு ஜனாதிபதி எதிர்வம் 18ம் திகதி உகண்டா விஜயம் செய்ய உள்ளார்.

அணிசேரா நாடுகளின் மாநாட்டில் பங்கு பற்றும் நோக்கில் அவர் இவ்வாறு உகண்டா விஜயம் செய்ய உள்ளார்.

இந்த விஜயத்தை முடித்துக் கொண்டு ஜனாதிபதி எதிர்வரும் 24ம் திகதி நாடு திரும்ப உள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button