News

நிறைவடையவுள்ள நாடாளுமன்ற சபை அமர்வு! வெளியானது அறிவிப்பு

நிறைவடையவுள்ள நாடாளுமன்ற சபை அமர்வு! வெளியானது அறிவிப்பு | Sri Lanka Parliament Mahinda Yapa Abeywardena

ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் நான்காவது சபை அமர்வு எதிர்வரும் 24 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது.

நாடாளுமன்றத்தை இந்த மாதத்தின் நடுப்பகுதியில் ஒத்தி வைப்பதற்கு அதிபர் ரணில் விக்ரமசிங்க திட்டமிட்டுள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகியிருந்த பின்னணியிலேயே, சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன இந்த அறிவிப்பை மேற்கொண்டுள்ளார்.

இதற்கமைய, ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் ஐந்தாவது சபை அமர்வு எதிர்வரும் பெப்ரவரி மாதம் 7 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

நாடாளுமன்ற சபை அமர்வை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பான வர்த்தமானியை எதிர்வரும் நாட்களில் அதிபர் ரணில் விக்ரமசிங்க வெளியிடுவார் என சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், நாடாளுமன்ற சபை அமர்வு முடிவுக்கு கொண்டு வரப்பட்டதன் பின்னர், கோப் மற்றும் கோபா உள்ளிட்ட நாடாளுமன்ற தெரிவுக்குழுக்களின் பதவிக்காலங்களும் நிறைவடையவுள்ளன.

இந்த நிலையில், நாடாளுமன்ற சபை அமர்வு மீள ஆரம்பமான பின்னர் குறித்த தெரிவுக்குழுக்கள் மீண்டும் புதிதாக நியமிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button