News

கிராம உத்தியோகத்தர் பரீட்சை எழுதியவர்களுக்கான அறிவிப்பு

கிராம உத்தியோகத்தர் தெரிவிற்கான பரீட்சையின் பெறுபேறுகள் வெளியாகியுள்ளன.

இதற்கமைய வெற்றிடமான கிராம உத்தியோகத்தர் பதவிகளுக்கு நேர்முகப் பரீட்சைக்கு தகுதி பெற்றவர்களின் விபரங்கள் நேற்று(27.01.2024)வெளியிடப்பட்டுள்ளதாக உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த தெரிவித்துள்ளார்.

பரீட்சை திணைக்களத்தினால் வழங்கப்பட்டுள்ள பிரதேச செயலகப் பிரிவுகளின் பிரகாரம் நேர்முகப்பரீட்சைக்குத் தகுதி பெற்ற 4,232 பேரின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த பட்டியல் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.moha.gov.lk இல் வெளியிடப்பட்டுள்ளது.

பரீட்சை திணைக்களத்தினால் கிராம உத்தியோகத்தர் பதவிக்கான பரீட்சை கடந்த டிசம்பர் மாதம் 02 ஆம் திகதி இடம்பெற்றது.

இந்த பரீட்சை முடிவுகளின்படி 2002 கிராம உத்தியோகத்தர் வெற்றிடங்களுக்கு ஆள்சேர்ப்பு நடைபெறவுள்ளது.

வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம், நேர்முகத் தேர்வுகள் விரைவில் நடத்தப்பட்டு, அவர்கள் அரச சேவைக்குள் உள்ளீர்க்கப்படுவார்கள் என இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button