News

ஏப்ரல் மாதத்தில் முக்கிய அறிவிப்பை வெளியிடவுள்ள ஜனாதிபதி!

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதா இல்லையா? என்பது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விரைவில் தீர்மானம் எடுக்கவுள்ளார்.

அதற்கமைய, எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் இது தொடர்பான அறிவிப்பை வெளியிட ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக அரசாங்கத்தின் உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்த அறிவிப்புக்கு முன்னர் ஜனாதிபதி விக்ரமசிங்கவின் அரசியல் பலத்தை அளவிடுவதற்கு நாடளாவிய ரீதியில் கணக்கெடுப்பு நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் குறித்த அறிவிப்பு எதிர்வரும் ஏப்ரல் மாதம் வெளியிடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button