News

உத்தியோகபூர்வ சீருடையை புறக்கணித்த தாதியர்கள்

அரச வைத்தியசாலைகளில் பணிபுரியும் தாதியர்கள் சாதாரண ஆடைகளை அணிந்து பணிக்கு சமூகமளிக்கத் தீர்மானித்துள்ளதாக அரச சேவை ஐக்கிய தாதியர் சங்கம் தெரிவித்துள்ளது.

குறித்த தீர்மானத்தை இன்று (06.02.2024) முதல் நடைமுறைப்படுத்தவுள்ளதாகவும் சங்கம் கூறியுள்ளது.

தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாததைக் கண்டித்து, அவர்கள் தமது உத்தியோகபூர்வ சீருடையை அணிய மறுத்துள்ளார்களென செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அதன் தலைவர் முருத்தெட்டுவே ஆனந்த தேரர் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button