News

நாட்டில் மின் நெடுக்கடி ஏற்படக்கூடும்!

உத்தேசிக்கப்பட்டுள்ள புதுப்பிக்கத்தக்க மின் நிலையத் திட்டங்களை நடைமுறைப்படுத்தாவிட்டால், இந்த வருடத்தில் நாட்டில் மீண்டும் மின்சார நெருக்கடி ஏற்படக்கூடும் என இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் கலாநிதி நரேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

நிதி திவால்நிலைக்கான காரணங்களை ஆராய்ந்து பாராளுமன்றத்திற்கு அறிக்கை சமர்பிப்பதற்காக மின்சார சபையின் அதிகாரிகள் பாராளுமன்ற விசேட குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்த நிலையில் இதன்போது கடந்த காலங்களில் நாட்டில் ஏற்பட்டுள்ள மின்சார நெருக்கடி தொடர்பில் விடயங்கள் கேட்கப்பட்டன.

இதன்போது, கருத்து தெரிவித்த மின்சார சபையின் பொது முகாமையாளர் கலாநிதி நரேந்திர சில்வா, கடந்த அரசாங்கங்கள் எடுத்த சில தீர்மானங்கள் மற்றும் மின் உற்பத்தித் திட்டங்களுக்கு அமைவாக மின் உற்பத்தி நிலையங்கள் இயங்காததன் விளைவுகளை மக்கள் தற்போது அனுபவிக்க நேரிட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

செயற்திறன் ஆற்றல் வகைகளை பயன்படுத்தி எதிர்கால உற்பத்தித் திட்டங்களைத் தயாரிக்க வேண்டும் என மின்சார சபையின் பொது முகாமையாளர் கலாநிதி நரேந்திர சில்வா தெரிவித்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button