News

நிகழ்நிலை பாதுகாப்பு சட்டத்தில் புதிய திருத்தங்கள்

உத்தேச நிகழ்நிலை பாதுகாப்பு சட்டத்தில் புதிய திருத்தங்களை நடைமுறைப்படுத்த இன்னும் ஒரு மாதம் ஆகும் என நீதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பான திருத்தங்களை பொது பாதுகாப்பு அமைச்சகம் சமர்ப்பிக்க உள்ளது.

பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ் முன்வைத்த பிரேரணையின் பிரகாரம் இந்த திருத்தத்தை முன்வைக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

பல்வேறு தரப்பினரின் எதிர்ப்பை கருத்தில் கொண்டு அமைச்சரவையில் 30க்கும் மேற்பட்ட திருத்தங்கள் சமர்ப்பிக்கப்பட்டதாக அமைச்சர் திரான் அலஸ் தெரிவித்தார்.

சமூக ஊடக வலையமைப்புகள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையில் புதிய திருத்தங்கள் முன்மொழியப்பட்டுள்ளன.

சமீப நாட்களில், இந்த சட்டம் பல தரப்பினரால் விமர்சிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button