News

இலங்கையில் ஒரு ஆண்டில் 50000 விவாகரத்துகள்..! வெளியான அதிர்ச்சி தகவல்

இலங்கையில் திருமண முறிவுகள் அதிகரித்துள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மேல் மாகாண நீதிமன்றத்தினால் தனிநபர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்காக விசேட நிகழ்ச்சி ஒன்று தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் நேற்று இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே இதனை கூறியுள்ளார்.

இதன்போது கருத்து தெரிவித்த அவர், டிசம்பர் 2022 நிலவரப்படி கிட்டத்தட்ட 50,000 விவாகரத்து வழக்குகள் நீதிமன்றங்களில் விசாரிக்கப்பட்டுள்ளன.

இந்த காலப்பகுதியில் 37, 514 வழக்குகள் வாழ்க்கைத் துணை அல்லது குழந்தைகளுக்கான பராமரிப்பு தொடர்பானது.

“இலங்கை போன்ற ஒரு சிறிய நாட்டிற்கு இது ஒரு பாரிய எண்ணிக்கையிலான வழக்குகளாக கருதப்படுகிறது,” என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button