News

பாடசாலைகளுக்கு நாளை முதல் விடுமுறை: வெளியான அறிவித்தல்

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கு நாளை முதல் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இவ்விடயம் குறித்து கல்வி அமைச்சு வெளிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

2023 ஆம் ஆண்டிற்கான மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகள் நாளையுடன்(16) நிறைவடையவுள்ளது.

இதற்கமைய, 2024 ஆம் ஆண்டுக்கான முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 19 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படும் என்றும் கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், சனி மற்றும் ஞாயிறு தினங்கள் மூன்றாம் தவணைக்கான விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button