News

இலங்கைக்குள் நுழையும் இந்திய வங்கிகளும் – ரூபாய்களும்

இலங்கையின் மூன்று முக்கிய அரச வங்கிகள் தற்போது பெரும் நெருக்கடியை எதிர்நோக்கி வருவதாக கொழும்பு பல்கலைக்கழக பொருளியல் துறை பேராசிரியர் கோபாலபிள்ளை அமிர்தலிங்கம் தெரிவித்துள்ளார்.

இந்த அரச வங்கிகளின் வீழ்ச்சி காரணமாக இந்திய வங்கிகள் பல கொழும்பு உள்ளிட்ட பல நகரங்களில் தமது கிளைகளை ஆரம்பித்துள்ளதாகவும், இதன்மூலம் இந்திய ரூபாய்கள் விரைவில் இலங்கைக்குள் நுழைய வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தைக் கூறியுள்ளார்.

மேலும், மத்திய வங்கியில் இருக்கும் தொழில்நுட்பத்தின் மூலம் 10 இலட்சத்திற்கும் அதிகமாக வைப்பிலிடுபவர்களுக்கு பெரும் சிக்கல்கள் உள்ளதாகவும், அரசாங்கம் பல கடுமையாக கட்டுப்பாடுகள் மூலம் இறுக்க முற்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

எனவே அரச வங்கிகள் வீழ்ச்சியடையும் போது தனியார் வங்கிகளும் வீழ்ச்சியடையும் எனவும் எச்சரித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button