News

ஹசரங்கவுக்கு போட்டி தடை விதித்த ஐ.சி.சி.!

இலங்கை டி20 கிரிக்கெட் அணியின் தலைவர் வணிந்து ஹசரங்கவுக்கு இரண்டு சர்வதேச போட்டித் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

மேலும், கடந்த போட்டிக் கட்டணத்தில் 50 வீத அபராதமும் சர்வதேச கிரிக்கட் பேரவை விதித்துள்ளது.

ரங்கிரி தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நேற்று முன்தினம் (22) இடம்பெற்ற ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியின் பின்னர் ஒழுக்கமின்றிய முறையில் நடந்து கொண்டமை தொடர்பில் அவருக்கு சர்வதேச கிரிக்கட் பேரவை (ICC) இவ்வாறு ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்நிலையில், குறித்த ஒழுக்காற்று நடவடிக்கைக்கு மேலதிகமாக வணிந்துவுக்கு 1 குற்றப் புள்ளியை வழங்கவும் சர்வதேச கிரிக்கட் பேரவை தீர்மானித்துள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button