News

நாடாளுமன்ற அனுமதியின்றி அதிகரிக்கப்பட்ட மத்திய வங்கி ஊழியர்களின் சம்பளம்!

மத்திய வங்கி ஊழியர்களின் அபரிமிதமான சம்பள உயர்வு தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தநிலையில் நாடாளுமன்ற அனுமதியின்றி சம்பள அதிகரிப்புக்கான சட்ட ஏற்பாடுகள் குறித்து மத்திய வங்கியிடம் இருந்து உயர்மட்ட நாடாளுமன்ற குழு அறிக்கையை கோரியுள்ளது.

கடந்த வியாழக்கிழமை (22) மத்திய வங்கி அதிகாரிகளுடன் இடம்பெற்ற சந்திப்பின் போது, சம்பள உயர்வு தொடர்பான விடயம் எழுப்பப்பட்டதாக பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தை தணிக்கும் துறைசார் மேற்பார்வை குழுவின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் காமினி வலேபொட தெரிவித்துள்ளார்.

இதன்படி சம்பள அதிகரிப்பு தொடர்பான அறிக்கையை மத்திய வங்கி அடுத்த வாரம் சமர்ப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button