News

இலங்கை வருகை தரவுள்ள சர்வதேச நாணய நிதிய குழு

imf sri lanka

சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகள் குழு இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக நிதி அமைச்சின் செயலாளர் மகிந்த சிறிவர்தன தெரிவித்துள்ளார்.

குறித்த சர்வதேச நாணய நிதிய குழு நாளை மறுதினம் 7 ஆம் திகதி வருகை தரவுள்ளது.

இதன்போது இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தால் ஆதரிக்கப்படும் திட்டத்தின் மூன்றாவது தவணை கொடுப்பனவு தொடர்பான நிதி விவகாரங்கள் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், அதிபர் ரணில் விக்ரமசிங்க மற்றும் ஏனைய உயர்மட்ட அதிகாரிகள் உள்ளிட்ட பல முக்கிய பங்குதாரர்களுடன் குறித்த குழு கலந்துரையாடப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button