News

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படவுள்ள 200 பேருந்துகள்

எதிர்காலத்தில் நவீன வசதிகளுடன் கூடிய 200 மின்சார பேருந்துகளை சேவையில் உட்படுத்த எதிர்பார்த்துள்ளதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தை அவர் நாடாளுமன்ற உறுப்பினர் நிரோஷன் பெரேரா எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே குறிப்பிட்டுள்ளார்.

மேல் மாகாணத்தில் நவீன வசதியுடன் கூடிய 200 மின்சார பேருந்துகளை போக்குவரத்து சேவைக்கு உட்படுத்துவதாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், அதன் முதற்கட்டமாக தமிழ் சிங்கள புத்தாண்டுக்கு முன்னர் 50 பேருந்துகளை சேவையில் உட்படுத்துவதாகவும் அமைச்சர் நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு இலங்கை போக்குவரத்து சபை மற்றும் புகையிரத திணைக்களம் இணைந்து 2017 ஆம் ஆண்டு முதல் பொது போக்குவரத்திற்காக இ-டிக்கெட் முறையை அறிமுகம் செய்ய முயற்சித்த போதிலும் அது இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை ஆனால் இந்த இ-டிக்கெட் திட்டத்தை அடுத்த ஆறு மாதங்களுக்குள் நடைமுறைப்படுத்த எதிர்பார்த்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் இலங்கை போக்குவரத்து சபை மற்றும் ரயில்வே திணைக்களத்தினால் நடத்தப்படும் பொது போக்குவரத்திற்காக இத்திட்டத்தை அறிமுகப்படுத்த எதிர்பார்ப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button