News

பெரிய வெங்காய விலையை குறைக்க இறக்குமதியாளர்கள் இணக்கம்

எதிர்வரும் பண்டிகை காலத்தில் பெரிய வெங்காயத்தின் விலையை குறைக்கும் வகையில் கட்டுப்பாட்டு விலையை நிர்ணயிக்க நடவடிக்கை எடுப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

பண்டிகை காலத்தில் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்குவது தொடர்பில் அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர்களுக்கும் வர்த்தக அமைச்சருக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று நேற்று(14) வியாழக்கிழமை நடைபெற்றுள்ளது.

குறித்த கலந்துரையாடலின் பின்னர் அமைச்சர் நளின் பெர்னாண்டோ ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.

இதன் போது அவர் தெரிவிக்கையில், அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர்களுடனான கலந்துரையாடல் வெற்றியடைந்துள்ளதுடன் போட்டி விலையில் தமது பொருட்களை உள்ளூர் சந்தைக்கு வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இறக்குமதியாளர்கள் தங்களுடைய கையிருப்பிலுள்ள பெரிய வெங்காயத்தை 450 ரூபா மற்றும் 500 ரூபாவிற்கு இடையில் விற்பனை செய்ய இணக்கம் தெரிவித்துள்ளதாக கூறியுள்ளார்.

பெரிய வெங்காயம் இறக்குமதிக்கு பாகிஸ்தான் கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாக இறக்குமதியாளர்கள் தெரிவித்தாலும் ஒல்லாந்து மற்றும் துருக்கி ஆகிய பிற நாடுகளில் இருந்து பெரிய வெங்காயத்தை இறக்குமதி செய்வதோடு கையிருப்பிலுள்ள வெங்காயத்தை பண்டிகைக் காலங்களில் குறைந்த விலையில் வழங்க தயாராக உள்ளதாக அவர்கள் தெரிவித்ததாக நளின் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button