News

ரயில் Online ஆசன முன்பதிவில் சிக்கல்!

தொலைதூர ரயில்களில் ஆசன முன்பதிவு செய்ய புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இணையவழி முறை சிக்கலை ஏற்படுத்துவதாக ரயில் பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதனால் கோட்டை ரயில் நிலையத்திற்கு வந்த பயணிகள் பலர் நேற்று அசௌகரியங்களுக்கு உள்ளாகினர்.

சாதாரண பயணிகள் மற்றும் அரசாங்க ஊழியர்களுக்கான டிக்கெட் முன்பதிவு செயல்முறையை டிஜிட்டல் மயமாக்கும் நடவடிக்கையாக இலங்கை ரயில்வே சமீபத்தில் முதல் இணையவழி டிக்கெட் மற்றும் இணையவழி ரயில் ஆசன முன்பதிவு முறையை அறிமுகப்படுத்தியது.

அதன்படி, இணையவழி முறையில் ஆசன முன்பதிவு செய்த பயணிகளுக்கு டிக்கெட் ஒதுக்கப்பட்டாலும், ஆசன முன்பதிவு செய்ய ரயில் நிலையத்திற்கு வந்த பின், சில பயணிகளுக்கு ஆசன ஒதுக்கீடு செய்யப்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button