News

நீக்கப்படப்போகும் அரசியல்வாதிகளின் பாதுகாப்பு!

பாதுகாப்பு அச்சுறுத்தல் இல்லாத அரசியல்வாதிகள் மற்றும் பல தரப்பட்ட உயரதிகாரிகள் தொடர்பில் விசாரணை நடத்தி அறிக்கைகளை உடனடியாக சமர்ப்பிக்குமாறு பொது பாதுகாப்பு அமைச்சர் திரன் அலஸ் கடந்த வாரம் அரச புலனாய்வு சேவைக்கு அறிவித்துள்ளார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த திரன் அலஸ், அரசியல்வாதிகளுக்கும் ஏனையவர்களுக்கும் தேவையற்ற வகையில் வழங்கப்பட்ட காவல்துறை உத்தியோகத்தர்கள் விரைவில் நீக்கப்படுவார்கள்.

பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் இல்லாதவர்களுக்கு சுமார் ஐயாயிரம் காவல்துறை உத்தியோகத்தர்கள் இவ்வாறு பாதுகாப்பில் ஈடுபடுத்தப்படுவதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலைமை காரணமாக காவல்துறையினரின் பொது கடமைகளுக்கு காவல்துறை உத்தியோகத்தர்களுக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button