News

மைத்திரியின் புதிய அரசியல் கூட்டணி! தேர்தலை முன்னிட்டு நகர்வு

சிறிலங்கா சுதந்திர கட்சி தலைமையிலான புதிய கூட்டணி அமைக்கப்படுவது மேலும் தாமதிக்கப்படலாம் என கட்சி வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

இதன்படி, வெளிப்படுத்தப்பட முடியாத சில காரணங்கள் காரணமாக கட்சியின் அங்குரார்ப்பண நிகழ்வு தாமதிக்கப்பட்டுள்ளதாக கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் பேராசிரியர்.ரோஹண லக்ஸ்மன் பியதாச தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா சுதந்திர கட்சி தலைமையிலான புதிய கூட்டணியை அமைப்பதில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் இந்த வாரம் நடைபெறவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இதனை தொடர்ந்து, கூட்டணியை அமைப்பது தொடர்பான உத்தியோகப்பூர்வ அறிவிப்பு மேற்கொள்ளப்படுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த கூட்டணியில் பல அரசியல் கட்சிகளும் நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயல்படும் உறுப்பினர்களும் அங்கம் வகிக்கவுள்ளதாக ரோஹண லக்ஸ்மன் பியதாச மேலும் தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button