News

சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து இன்று வாக்கெடுப்பு

சபாநாயகர் மகிந்த யாபா அபேவர்தனவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பு இன்றைய தினம் மேற்கொள்ளப்பட உள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளினால் சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்ப்பிக்கப்பட்டது.

இன்றைய தினம் மாலை 4.30 மணிக்கு இது குறித்த வாக்கெடுப்பு மேற்கொள்ளப்பட உள்ளது.

இந்த பிரேரணை தொடர்பில் கடந்த 19ம், 20ம் திகதிகளில் விவாதம் நடத்தப்பட்டது. இன்றைய தினமும் நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பில் விவாதம் நடத்தப்பட உள்ளது.

நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்த வாக்கெடுப்பு நடத்தப்பட்டதன் பின்னர் சபாநாயகர் விசேட உரையொன்றை நிகழ்த்த உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button