News

வவுனியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த யுவதி!

வவுனியா சமனங்குளம் பகுதியில் இருந்து 23 வயது யுவதி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக சிதம்பரபுரம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த குறித்த யுவதி அப்பகுதியிலுள்ள வீடொன்றில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த நிலையில் காணப்பட்டுள்ளார்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் கிடைத்த தகவலையடுத்து அங்கு சென்ற காவல்துறையினர் யுவதியின் சடலத்தை மீட்டுள்ளனர்.

சடலமாக மீட்கப்பட்ட யுவதி ஆசிகுளம், சிதம்பரநகர் பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய கவிப்பிரியா என்பவராவார்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button