News

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரினால் போராட்டம் முன்னெடுப்பு.!

வவுனியா பழைய பஸ் நிலையம் முன்பாக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளினால் சர்வதேச நீதிகோரி கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இன்று 30.03.2024 காலை தங்கள் பிள்ளைகள் எங்கே, எங்கள் உறவுகள் எங்கே…என்ற பதாதைகளை ஏந்தியவாறு போராட்டம் செய்துள்ளனர்.

கடந்த 5 வருடங்களாக தாம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தும் எமக்கான எவ்வித தீர்வும் கிடைக்கவில்லை அதேபோல் தொடர்ச்சியாக எமது நிலைமை இன்னும் மோசமடைகின்றது. என குறித்த போராட்டக்காரர்களினால் கவலைகள் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சர்வதேச நீதிகோரி பாரிய குரலாக கோஷங்களும் எழுப்பி பல்வேறு வகையில் தாம் பாதிப்புக்குள்ளானதுக்கு தீர்வு வேண்டும் என்ற கோரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button