News

ஐபிஎல் தொடரில் இருந்து விலகும் முக்கிய வீரர்

ஐ.பி.எல் தொடரின் 17-வது சீசனிலிருந்து சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் வீரர் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான வனிந்து ஹசரங்கா முழுமையாக விலகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஐ.பி.எல் தொடரானது ஆரம்பமாகி சிறப்பாக நடைபெற்று வருகின்றது.

எனினும் தொடரிலிருந்து சில வீரர்கள் சில காரணங்களுக்காக விலகிய வண்ணம் உள்ளனர்.

இந்நிலையில் பங்களாதேஸ் அணிக்கெதிரான தொடரின் போது, இடது குதிகால் பகுதியில் காயமடைந்துள்ளதால் வனிந்து ஹசரங்கா ஐ.பி.எல் தொடரிலிருந்து விலகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே எதிர்வரும் டி20 உலகக்கோப்பை தொடரை கருத்தில் கொண்டு அவர் நடப்பு ஐ.பி.எல் தொடரில் இருந்து விலக உள்ளதாக கூறப்படுகின்றது.

சமீபத்திய ஏலத்தில் 1.5 கோடி ரூபாய்க்கு இவரை சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வாங்கியமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button