News

சிறிலங்கா இராணுவத்தினருக்கு வெளியான முக்கிய தகவல்

விடுமுறைக்கு அனுமதி எடுக்காமல் கடமைக்கு சமூகமளிக்காத இராணுவத்தினருக்கு சட்டரீதியாக இராணுவ சேவையை விட்டு வெளியேற பொது மன்னிப்பு காலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, நீண்டகாலமாக விடுமுறை அனுமதியின்றி கடமைக்கு சமூகமளிக்காத இலங்கை இராணுவத்தினருக்கு 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி முதல் மே மாதம் 20 ஆம் திகதி வரை பொது மன்னிப்பு காலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரகடனப்படுத்தப்பட்ட பொது மன்னிப்புக் காலப்பகுதியில் தாங்கள் சேர்ந்த படைப்பிரிவு நிலையங்கள் தொடர்பில் சட்டரீதியாக சேவையில் இருந்து விலகுவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை இராணுவம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

அத்தோடு, ஏப்ரல் 2 ஆம் திகதி,  அல்லது அதற்கு முன் விடுப்பு இல்லாமல் பணிக்கு அறிக்கை செய்யாத அதிகாரிகள் மற்றும் பிற ஆணையிடப்படாத அதிகாரிகள் தங்களது ஆவணங்களுடன் மட்டுமே தங்கள் படைப்பிரிவு மையத்திற்கு புகாரளிக்க வேண்டும்.

அதேவேளை, விடுப்பு இன்றி சேவைக்கு சமூகமளிப்பதைத் தவிர வேறு எந்த ஒழுக்காற்று நடவடிக்கைகளிலும் ஈடுபடாத இராணுவ உறுப்பினர்கள் மற்றும் இராணுவ சேவையில் இருந்து சட்டப்பூர்வமாக வெளியேறாமல் வெளிநாட்டில் இருக்கும் இராணுவ உறுப்பினர்கள் இந்த பொது மன்னிப்பின் போது சட்டரீதியாக சேவையை விட்டு வெளியேறுவதற்கு வசதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button