News

எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் விவகாரம்: நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு

எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் தீ விபத்து தொடர்பான விசாரணைகளை விரைவில் முடிக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

குறித்த வழக்கானது, நேற்று முன்தினம் அழைக்கப்பட்ட போது, குற்றப் புலனாய்வு திணைக்களம் சார்பில் முன்னிலையான அரச சட்டத்தரணி, இந்த விசாரணைகள் தொடர்பான உண்மைகளை முன்வைக்க ஒரு மாத கால அவகாசம் கோரியுள்ளதாக தகவல்கள் கிடைக்கபெற்றுள்ளன.

மேலும், குறித்த முறைப்பாட்டில் சந்தேகநபர்களாக குறிப்பிடப்பட்டுள்ள கப்பலின் கெப்டன் மற்றும் உள்ளூர் பிரதிநிதிகள் நிறுவனத்தின் பணிப்பாளர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள், இந்த சம்பவம் தொடர்பில் பிரதிவாதிகளுக்கு எதிரான வழக்கு விசாரணை ஏற்கனவே கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளனர்.

இதன்படி முன்வைக்கப்பட்ட உண்மைகளை பரிசீலித்த மேலதிக நீதவான், விசாரணைகளை உடனடியாக முடிக்குமாறு காவல்துறையினருக்கு அறிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button