News

தாய்வானில் தொடரும் நிலநடுக்கங்கள்: அச்சத்தில் மக்கள்

தாய்வானின் ஹுவாலியன் நகரில் இன்றைய தினம் (27.04.2024) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டள்ளன.

குறித்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, தாய்வானின் தலைநகர் தைபேயிலும் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், இந்த நிலநடுக்கத்தால் இதுவரை எந்தவொரு சேதமும் ஏற்படவில்லை என தாய்வான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், தைவான் இந்த மாத தொடக்கத்தில் ஹுவாலியன் (Hualien) 7.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் தாக்கியதில் இருந்து 1,000 க்கும் மேற்பட்ட பின் அதிர்வுகள் ஏற்பட்டுள்ளதுடன் 17 பேர் பலியாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button