News

சிறிலங்கன் எயர்லைன்ஸை கையகப்படுத்த திட்டம்

தேசிய விமான நிறுவனமான சிறிலங்கன் எயர்லைன்ஸின் பங்குகளை வாங்குவதற்கான ஏலத்தில் சுப்ரீம் குளோபல் ஹோல்டிங்ஸ் நிறுவனம் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊடக அறிக்கைகளின்படி, கடந்த வாரம் (ஏப்ரல் 27) ஏலம் முடிவடைந்துள்ள நிலையில், ஷெரிஷா டெக்னோலஜிஸ் பிரைவேட் லிமிடெட்டின் கீழ் சுப்ரீம் குளோபல் நிறுவனத்தின் பங்கேற்பானது சிறிலங்கன் எயர்லைன்ஸின் பங்குகளை வாங்குவதற்கான ஆர்வத்தை வெளிப்படுத்துவதாக கூறப்படுகிறது.

சிறிலங்கன் எயர்லைன்ஸ் லிமிடெட்டின் பங்குகளை கையகப்படுத்துவதற்கு சாத்தியமான முதலீட்டாளர்களிடமிருந்து ஆறு (06) தகுதிக்கான கோரிக்கைகள் (RfQ) பெறப்பட்டதாக கடந்த வாரம் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், சிறிலங்கன் எயர்லைன்ஸின் பங்குகளுக்காக போட்டியிடும் ஆறு நிறுவனங்களில் ஷெரிஷா டெக்னோலஜிஸ் பிரைவேட் லிமிடெட் இருந்தது, ஆனால் அதன் உரிமை குறித்து கவலைகள் எழுப்பப்பட்டன.

பின்னர், சுப்ரீம் குளோபல் ஹோல்டிங்ஸ், இதற்கு முன்பு சன்எடிசன் எனேர்ஜி இந்தியா பிரைவேட் லிமிடெட் என்று அழைக்கப்பட்ட ஷெரிஷா டெக்னோலஜிஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் கீழ் ஏல செயல்முறையில் நுழைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

சுப்ரீம் குளோபல் ஹோல்டிங்ஸ், கத்தாரின் ஷேக் நயீப் பின் ஈத் அல் தானியின் தனியார் அலுவலகத்தின் முதலீட்டுப் பிரிவான MBS இன்வெஸ்ட்மென்ட்ஸ் உட்பட ஒரு வலுவான கூட்டமைப்பை உருவாக்கிய நிறுவனமாகவும் அறியப்படுகிறது.

சிறிலங்கன் எயர்லைன்ஸிற்கான தனது அண்மைய ஏலத்தில் கலந்துகொண்டது மாத்திரமல்லாமல், சுப்ரீம் குளோபல் ஹோல்டிங்ஸ், 2022 இல் இலங்கைக்கு ஏற்பட்ட எரிசக்தி நெருக்கடியின் போது, இலங்கைக்கு 1.5 பில்லியன் அமெரிக்க டொலர் கடனை வழங்கி உதவியது.

எண்ணெய் கொடுப்பனவுகளுக்கு இலங்கை ரூபாவை ஏற்றுக்கொள்வது போன்ற புதுமையான கொடுப்பனவு தீர்வுகளையும் வழங்கி, சுப்ரீம் குளோபல் ஹோல்டிங்ஸ் நிறுவனம் இலங்கைக்கு உதவியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button