News

இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலையில் மாற்றம்

நாட்டில் எரிபொருளின் விலையில் இன்று (30) நள்ளிரவு முதல் மாற்றம் ஏற்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

மாதாந்த எரிபொருள் விலை சூத்திரத்தின்படி, எரிபொருள் விலை திருத்தம் இடம்பெறவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகின்றது.

கடந்த மார்ச் 31ஆம் திகதி எரிபொருள் விலையில் கடைசித் திருத்தம் செய்யப்பட்டது.

இதற்கமைய, லங்கா பெற்றோல் 95 ஒக்டேன் யூரோ 4 ரக எரிபொருள் 07 ரூபாவினால் குறைந்துள்ளதுடன் 447 இன் விலை 440 ரூபாவாக பதிவாகியுள்ளது.

மேலும் லங்கா சுப்பர் டீசலின் புதிய விலை 386 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அத்துடன்  இலங்கை மண்ணெண்ணெய் 12 ரூபாவினால் குறைந்துள்ளதுடன் புதிய விலை 245 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இலங்கை ரூபாவின் வலுவடைந்துள்ளதாலும், உலக சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை குறைவாலும் எரிபொருளின் விலை குறைய வாய்ப்புள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், உலக சந்தையில் எரிபொருளின் விலையில் ஏற்படும் மாற்றங்களையும் கருத்திற் கொண்டு இந்த விலைத் திருத்தம் அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button