News

சஜித் பக்கம் தாவப்போகும் பெருமளவு ஆளும் தரப்பு எம் .பிக்கள்

அதிபர் தேர்தலுக்கு முன் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத்தேர்தல் அறிவிப்பு வந்தால் தற்போதைய ஆளுந்தரப்புப் பக்கத்தில் இருந்து சஜித் தலைமையிலான கூட்டணியில் 45 பேர் இணைவார்கள் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

நாடாளுமன்றத் தேர்தலில் ராஜபக்சாக்களின் மொட்டுக் கூட்டணியில் போட்டியிட்டால் தோல்வி கிடைக்கும் என்ற அச்சம் காரணமாகவே அவர்கள் சஜித் கூட்டணியில் இணைவார்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு இணையும் அந்த 45 பேரில் இந்நாள் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், எம்.பிக்கள் அடங்குவார்கள் என்று சொல்லப்படுகின்றது.

அதற்கான பேச்சுக்கள் தற்போதே திரைமறைவில் இடம்பெற்று வருகின்றன என்றும் கூறப்படுகின்றது.

எனினும், முதலில் அதிபர் தேர்தல் நடைபெற்றால் கள நிலைமை மாறும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

நாடாளுமன்றத் தேர்தல் அல்லாமல் முதலில் அதிபர் தேர்தல் அறிவிப்பு வந்தால் சஜித்தின் ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து பல எம்.பிக்கள், அதிபர் ரணில் விக்ரமசிங்கவுடன் இணைவார்கள் என்று சொல்லப்படுகின்றது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button