News

பாடசாலை விடுமுறை குறித்து வெளியான அறிவிப்பு

நாட்டிலுள்ள அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் பாடசாலைகளில் 2024ஆம் ஆண்டுக்கான முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் நாளையுடன் முடிவடையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை பாடசாலைகளின் முதலாம் தவணையின் மூன்றாம் கட்டம் எதிர்வரும் 20ஆம் திகதி ஆரம்பமாகும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளின் மூன்றாம் கட்டம் மே மாதம் 31ஆம் திகதி நிறைவடைகின்றது.

அத்துடன், 2023ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் திங்கட்கிழமை 06) ஆரம்பமாகவுள்ளது.

இந்த நிலையில் 3527 மத்திய நிலையங்களில் பரீட்சை நடைபெறும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் 15ஆம் திகதி வரை க.பொ.த சாதாரண பரீட்சைகள் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 2023 ஆம் ஆண்டிற்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இம்மாதம் கடைசி வாரத்தில் வெளியிடப்படும் என்று பரீட்சை திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button