News

உயர்தரப் பரீட்சை பெறுபேறு தொடர்பில் வெளியான தகவல்

2023 ஆம் ஆண்டிற்கான கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை (G.C.E A/L Exam) பெறுபேறுகள் இந்த வார இறுதியில் வெளியிடப்படும் என பரீட்சைகள் திணைக்களம் (Department of Examinations) தெரிவித்துள்ளது.

அத்துடன் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடும் நடவடிக்கைகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக அந்த வட்டாரங்கள் மேலும் குறிப்பிட்டுள்ளன.

கடந்த ஜனவரி மாதம் 4ஆம் திகதி ஆரம்பமாகிய உயர்தரப் பரீட்சை  பெப்ரவரி முதலாம் திகதி வரை நடைபெற்றது.

கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையில் 281,445 பாடசாலை விண்ணப்பதாரர்களும் 65, 531 தனியார் விண்ணப்பதாரர்களும் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றியிருந்தனர்.

மேலும் இன்று அல்லது நாளை பெறுபேறுகள் வெளியாகும் என்ற சமூக வலைத்தளங்களில் வெளியிடப்படும் உறுதிப்படுத்தப்படாத தகவல்களை நம்ப வேண்டாம் என பரீட்சைகள் திணைக்களம் கேட்டுக் கொண்டுள்ளது.

இதேவேளை 2023 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை (G.C.E O/L Exam) அண்மையில் நடைபெற்று முடிந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button