News

சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் மைத்திரியின் அடுத்த நகர்வு

தற்போதைய அரசியல் சூழ்நிலையை கருத்திற் கொண்டு சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் எதிர்கால செயற்பாடுகளை வேறு இடத்தில் இருந்து முன்னெடுப்பதற்கு முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் (Maithripala Sirisena) தரப்பு தீர்மானித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

அதன் படி, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகம் அன்றி, எதிர்கால அரசியல் நடவடிக்கைகளுக்கு கொழும்பில் உள்ள மற்றுமொரு இடம் பயன்படுத்தப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், இது தொடர்பில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அரசியல் குழு கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

தற்போது நிலவும் அரசியல் நெருக்கடி மற்றும் நீதிமன்ற தீர்ப்புகள் காரணமாக அரசியல் விவகாரங்கள் மற்றும் தொகுதிகள், மாவட்ட அமைப்பாளர்களை நிரந்தரமாக கூட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சுதந்திரக் கட்சியின் மைத்திரிபால சிறிசேன கட்சியின் அரசியல் செயற்பாடுகளை வேறொரு இடத்தில் இருந்து முன்னெடுப்பதே பொருத்தமானது என மைத்திரிபால சிறிசேன தரப்பினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதன்படி, புதிய அரசியல் நிலையமொன்றை ஆரம்பித்து, எதிர்வரும் அரசியல் விவகாரங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக நாடளாவிய ரீதியில் உள்ள மாவட்ட, தொகுதி அமைப்பாளர்களை கொழும்புக்கு வரவழைக்க உள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button