News

அதிகரித்துள்ள நீர் மின் உற்பத்தி : வெளியான தகவல்

நாட்டின் நீர் மின் உற்பத்தி இரண்டு மடங்காக அதிகரித்துள்ளதாகத்  தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறித்த தகவலை  இலங்கை மின்சார சபையின் உயர் அதிகாரியொருர்  தெற்கு ஊடகங்களிடம் கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில், அதிகளவான மழை காரணமாக இவ்வாறு மின்சார உற்பத்தி அதிகரித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனடிப்படையில், நேற்றைய தினம் (27) மொத்தமாக நீர் மின் உற்பத்தி நிலையங்கள் மூலம் 15.66 கிகாவோட் மணித்தியாலங்கள் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

இது மொத்த மின் உற்பத்தி விநியோகத்தின் 41.91 வீதம் என தெரிவிக்கப்படுவதுடன்  இந்த மாத ஆரம்பத்தில் 8.16 கிகாவோட் மணித்தியால மின்சாரம், நீர் மின் உற்பத்தி நிலையங்கள் ஊடாக உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

மேலும், நீர் மின் விநியோகம் அதிகரித்துள்ள காரணத்தினால் அனல் மின் உற்பத்தி விநியோகம் 25 வீதத்தினால் குறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button