News

மின்சார சட்டமூலம் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்

மின்சார சட்டமூலம் மீதான இரண்டாம் வாசிப்பு விவாதத்தை அடுத்த வாரம் நடத்துவதற்கு கட்சித் தலைவர்கள் தீர்மானித்துள்ளதாக நாடாளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடிய நாடாளுமன்ற அலுவல்கள் தொடர்பான குழு இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.

அதன்படி, விவாதம் ஜூன் 6, 2024 அன்று காலை 10.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெறவுள்ளது.

இலங்கை மின்சார சட்டமூலத்தில் முன்மொழியப்பட்ட மின்சாரத் துறை சீர்திருத்தங்களில் தனியார் துறையினரின் அதிக பங்களிப்பு காணப்படுகிறது.

இந்த நிலையில், எதிர்வரும் ஜூன் மாதம் 4 ஆம் திகதி முதல் 7ஆம் திகதி வரை நாடாளுமன்றம் கூடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button