News

இலங்கையில் சடுதியாக அதிகரித்த முட்டை நுகர்வு

முட்டை நுகர்வு அதிகரித்துள்ளதாக விலங்கு உற்பத்தி மற்றும் சுகாதாரத்துறை திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதாவது, கடந்த சில மாதங்களில் முட்டையின் நாளாந்த நுகர்வு 70 இலட்சமாகவும், பின்னர் 80 இலட்சத்தையும் கடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, முட்டையின் நாளாந்த நுகர்வு 10 இலட்சத்தால் அதிகரித்துள்ளதாக அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு முட்டை நுகர்வு அதிகரிப்பிற்கான காரணமாக சுட்டிக்காட்டப்படுகின்றது.

இதேவேளை அதிக சத்தான மற்றும் மலிவாக கிடைக்ககூடிய உணவுகளான இறைச்சி, மற்றும் மீன் விலைகள் அண்மைக்காலமாக அதிகரித்துள்ளமையும் முட்டை நுகர்வு அதிகரித்தமைக்கான காரணம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button