News

தொடருந்து திணைக்களம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

சமிக்ஞை அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக பிரதான மார்க்கத்தின் தொடருந்து சேவைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பல்லேவெல மற்றும் கனேகொட தொடருந்து நிலையங்களுக்கும் வெயங்கொட மற்றும் கம்பஹா தொடருந்து நிலையங்களுக்கும் இடையில் இவ்வாறு சமிக்ஞை அமைப்பில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதனை தொடருந்து திணைக்கள (Sri Lanka Railways) துணைப் பொது முகாமையாளர் ஜெ.என்.இந்திபொலகே (J.N. Inthipolage) தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சீரற்ற வானிலையுடன் பிரதான மார்க்கம், கரையோர மார்க்கம் மற்றும் புத்தளம் மார்க்கத்திலும் பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ள நிலையில், சமிக்ஞை அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக சில தொடருந்து சேவைகள் தாமதமாக வருவதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

பல தொடருந்து நிலையங்களுக்கு இடையில் மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளமையினால் தொடருந்து போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

இதேவேளை வாக மற்றும் கொஸ்கம தொடருந்து நிலையங்களுக்கு இடையிலான பாலம் ஒன்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதால் களனிவெளி மார்க்கத்தில் பயணிக்கும் தொடருந்துகள் வாக தொடருந்து நிலையம் வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button