News

O/L பொதுத்தேர்வு விடைத்தாள்கள் மதிப்பீடு : வெளியான தகவல்

மோசமான வானிலை காரணமாக 2023 (2024) க.பொ.த சாதாரண தர பொதுத்தேர்வு விடைத்தாள்கள் மதிப்பீடு தொடங்கும் திகதியை மாற்றியமைக்கவுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தகவலை உள்ளதாக இலங்கைப் பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனடிப்படையில், விடைத்தாள் மதிப்பீட்டில் ஈடுபட உள்ள அதிகாரிகளுக்கு ஏற்படும் சிரமங்களை கருத்தில் கொண்டு ஜூன் ஆறாம் திகதி தொடங்க இருந்த முதல் கட்ட மதிப்பீட்டு பணியை ஜூன் எட்டாம்  திகதி தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, முதல் கட்ட விடைத்தாள் மதிப்பீடு ஜூன் எட்டாம் திகதி முதல் ஜூன் 17 ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் 101 மையங்களில் நடைபெறும் என்று பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button