News

இன்று அனைத்து அரச பாடசாலைகளும் வழமைக்கு திரும்பும்

அனைத்து அரச பாடசாலைகளும் இன்று (28) வழமை போன்று திறக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இதேவேளை, நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்துப் பாடசாலைகளின் ஆசிரியர்களும் அதிபர்களும் சுகயீன விடுமுறையை இரண்டாவது நாளாக நேற்றைய தினமும் (27) முன்னெடுத்திருந்தனர்.

எவ்வாறாயினும், பாடசாலை கல்வி நடவடிக்கைகளை இன்று (28) வழமை போன்று முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் (Joseph Stalin)நேற்று (27) குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அடுத்த கட்டநடவடிக்கைகளை தீர்மானித்து கூறுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button