News

நாடு முழுவதும் களமிறக்கப்படும் ஆயுதப்படை!

நாடு முழுவதும் ஆயுதப்படைகளை வரவழைக்குமாறு அதிபர் ரணில் விக்ரமசிங்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.

பொதுமக்களின் பாதுகாப்பிற்காக குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளதாக சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன இன்று (2) நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

நாற்பதாவது அதிகாரமாக இருந்த பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் 12வது பிரிவின் கீழ் அவருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் படி ரணில் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

அதிபர் ரணில் விக்ரமசிங்க வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு உடன்படிக்கைகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் இன்று நாடாளுமன்றத்தில் விசேட உரையாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button